Skip to main content

இந்திய கப்பற்படைக்கு சொந்தமான மிக்-29கே போர் விமானம், 2 விமானிகளுடன் விபத்துக்குள்ளாகியது!

Nov 27, 2020 201 views Posted By : YarlSri TV
Image

இந்திய கப்பற்படைக்கு சொந்தமான மிக்-29கே போர் விமானம், 2 விமானிகளுடன் விபத்துக்குள்ளாகியது! 

கடந்த 26ம் தேதி மாலை இந்திய கப்பற்படைக்கு சொந்தமான மிக்-29கே போர் விமானம், 2 விமானிகளுடன் புறப்பட்டுள்ளது. அந்த விமானம் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியதாக வெளியான தகவல் அதிர்ச்சியளித்தது. இதனையடுத்து, விமானிகளை தேடும் பணியில் விமானப்படை வீரர்கள் களமிறங்கினர். இந்த நிலையில், விமான விபத்தில் சிக்கிய ஒரு விமானி உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்.



மற்றொரு பயிற்சி விமானியை தேடும் பணி தொடர்ந்து வருவதாக கப்பற்படை அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த விபத்து குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மிக்-29கே ரக போர் விமானங்கள் ஐஎன்எஸ், விக்கிரமாதித்யா உள்ளிட்ட போர் கப்பல்களில் பயன்படுத்தப் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



 

Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை