Skip to main content

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து நாளை விசாரணை!

Nov 22, 2020 254 views Posted By : YarlSri TV
Image

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து நாளை விசாரணை! 

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து நாளை விசாரணை தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.



அரியர் தேர்ச்சி விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல விவகாரங்களில் தமிழக அரசுக்கும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. அதுமட்டுமில்லாமல் சூரப்பா மீது ஊழல் புகார்களும் எழுந்தன. இதனால் சூரப்பாவை தகுதி நீக்கம் செய்ய முடிவெடுத்த, புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை நியமித்தது. அந்த குழுவின் பரிந்துரையின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.



இந்த நிலையில், துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் பற்றி நாளை முதல் விசாரணை தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. சென்னை பசுமை வழி சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில் கலையரசன் தலைமையிலான குழு விசாரணை நடத்த உள்ளது. ஜல்லிக்கட்டு விசாரணை நடந்த இடத்தில் தான் விசாரணை நடக்கவிருக்கிறது. நீதிபதி கலையரசன் விசாரணைக்காக 5 உறுப்பினர்கள் மற்றும் 8 பணியாளர்களை அரசு நியமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை