எல்லோரும் நம்முடன்’ திட்டத்தின் மூலமாக 20 லட்சத்திற்கும் மேல் திமுகவில் புதிய உறுப்பினர்கள்!
Nov 21, 2020 208 views Posted By : YarlSri TV
எல்லோரும் நம்முடன்’ திட்டத்தின் மூலமாக 20 லட்சத்திற்கும் மேல் திமுகவில் புதிய உறுப்பினர்கள்!
எல்லோரும் நம்முடன் திட்டத்தின் மூலமாக 20 லட்சத்திற்கும் மேல் திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கை என்பது திமுகவின் அண்டப்புழுகு ஆகாசப்புளுகுகளில் ஒன்று என்கிறார்கள் பலரும்.
இந்நிலையில், ‘’திமுக Website கடந்த இரண்டு மாதங்களில் 2,99,586 முறை பார்க்கப்பட்டுள்ளது. அதே இரண்டு மாதத்தில் 20 லட்சம் பேர் இணையவழி இணைந்துள்ளனர் என்று ஸ்டாலின் சொல்கிறார். இது எப்படி சாத்தியம்? Mobile app கணக்கு வைத்து பார்த்தாலும் வாய்ப்பே இல்லையே ராஜா!’’ என்கிறார் திமுகவின் மோசடிகளை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் மாரிதாஸ்.
திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதற்காக அக்கட்சியால் நியமிக்கப்பட்டிருக்கும் ஐபே நிறுவனம், திமுகவுக்கு வலு சேர்க்கும் விதமாக, ’எல்லோரும் நம்முடன் திட்டத்தினை திமுகவை தொடங்க வைத்தது ஐபேக். இந்த திட்டத்தின் மூலமாக 20,00,000 உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது திமுக செய்தி வெளியிட்டது. ஆனால் அது உண்மை இல்லை என்கிறார் மாரிதாஸ்.
மக்களை ஏமாற்றுகிறேன் என்று ஏன் இப்படி தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறார் ஸ்டாலின் என்று கேட்டும், இல்லை ஸ்டாலினிடம் ஐபேக் பிரசாந்த் கிஷோர் பொய்க்கணக்கு காட்டுகிறாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
டுவிட்டரில் திமுகவுக்கு சாதகமான டிரெண்டுகள் எல்லாம் பீகாரில் இருந்து தான் 80% டிவிட் போட்டு பொய்யான பிம்பத்தை பிரசாந்த் கிஷோர் மூலம் உருவாக்குகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய மாரிதாஸ், திமுக உறுப்பினர் சேர்க்கையின் மோசடிகளையும் அம்பலப்படுத்தி இருக்கிறார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago