சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கு தேர்வு நிச்சயம் உண்டு!
Nov 20, 2020 273 views Posted By : YarlSri TV
சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கு தேர்வு நிச்சயம் உண்டு!
கொரோனா காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் சிபிஎஸ்இ தேர்வு நிச்சயம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் ( 2019-2020 ) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வும் ரத்து செய்யப்பட்டது.
முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது. இதேபோல் நடப்பு கல்வியாண்டில் ( 2020-2021 ) 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளாது.
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. 10, 12 வகுப்புகளுக்கு தேர்வுகள் நிச்சயம் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அமைப்பின் நிர்வாகிகள் குழுவின் செயலாளர் அனுராக் திரிபாதி தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பிளஸ் 2 வகுப்பிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது, முதலில் செய்முறை தேர்வுகளும், பின்னர் எழுத்து தேர்வுக்களுக்கான அட்டவணையும் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் நாடு முழுவதும் 12 லட்சம் சிபிஎஸ்இ மாணவர்கள் பள்ளி இறுதி ஆண்டு பொதுத்தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1474 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1474 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1474 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1474 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1474 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1474 Days ago