கால்வாய் அமைக்கும் பணிகள் மழைக்கும் மத்தியில் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது!
Nov 20, 2020 244 views Posted By : YarlSri TV
கால்வாய் அமைக்கும் பணிகள் மழைக்கும் மத்தியில் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது!
வவுனியா நகரசபை உறுப்பினர் ரி.கே .இராஜலிங்கத்தின் வட்டார நிதி ஒதுக்கீட்டில் முதலாம் குறுக்குத்தெரு கால்வாய் அமைக்கும் பணிகள் மழைக்கும் மத்தியில் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
நகரசபையின் வருடாந்த நிதி ஒதுக்கீட்டில் வட்டார உறுப்பினர் ரி.கே இராஜலிங்கத்தின் ஆறு இலட்சம் ரூபாய் நிதியில் 44 மீற்றர் நீளமான கால்வாய் அமைக்கப்பட்டு வருகின்றது. இம் மாதம் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் மழைக்கும் மத்தியில் தற்போது மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வேலைத்திட்டங்களை கண்காணிப்பதற்காக இன்று அப்பகுதிக்கு சென்று கால்வாய் அமைக்கும் பணிகளை நகரசபை உறுப்பினர் பார்வையிட்டுள்ளதுடன் நகரசபை தொழிநுட்ப உத்தியோககத்தருடன் இடம்பெற்று வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டதாக நகரசபை உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார் .
நீண்டகாலமாக குறித்த கால்வாய் அமைக்கப்படுவதற்கான ஆயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில் கால்வாய் அமைக்கும் பணிகளில் தாதமங்கள் ஏற்பட்டுள்ளதையும் இதனால் பல்வேறு அசௌகரியங்களும் வர்த்தகர் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து மழைக்கும் மத்தியிலும் தற்போது மீண்டும் வேலைத்திட்டங்கள் முன்னெடுத்து செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago