3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி கைது!
Nov 23, 2020 265 views Posted By : YarlSri TV
3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி கைது!
யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை யானைக்கவுனியில் கடந்த 11 ஆம் தேதி ஒரே குடும்பத்தைசேர்ந்த 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தலில் சந்த் (74), மனைவி புஷ்பா பாய் (70) மகன் ஷீத்தல் (38) ஆகிய மூவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார் குற்றவாளிகளை மகாராஷ்டிரா வரை சேசிங் செய்து பிடித்தனர்.
உயிரிழந்தவர்களுள் ஒருவரான ஷீத்தலின் மனைவி ஜெயமாலா தான், திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றினார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனால் ஜெயமாலாவின் சகோதரர் ராஜு ஷிண்டே, விகாஷ் உட்பட 3 பேர் அண்மையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். அதில் , ஜெயமாலாவுக்கு அவரது மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலையை அரங்கேற்றியதாக வாக்குமூலம் அளித்தனர்.
இந்நிலையில் சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி கொடுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சேர்ந்த ராஜிவ் துபே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் இருந்து அழைத்து வந்து விசாரணை செய்த நிலையில், துப்பாக்கி, வாகனம் கொடுத்து உதவியதாக தனிப்படை போலீசார் கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
20 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
20 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
20 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
20 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
20 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
20 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago