நாடாளுமன்றம் செல்வது குறித்த முடிவை பசில் ராஜபக்சவே எடுப்பார் மஹிந்த ராஜபக்ஷ!
Nov 15, 2020 235 views Posted By : YarlSri TV
நாடாளுமன்றம் செல்வது குறித்த முடிவை பசில் ராஜபக்சவே எடுப்பார் மஹிந்த ராஜபக்ஷ!
நாடாளுமன்றம் செல்வது குறித்த முடிவை பசில் ராஜபக்சவே எடுப்பார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்ச தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லவேண்டும் என ஒருமித்த குரலில் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அவர் தான் நாடாளுமன்ற அரசியலில் ஈடுபடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் நாடாளுமன்றம் திரும்பி நாட்டிற்கு சேவையாற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் இது முற்றுமுழுதாக அவரே தீர்மானிக்கவேண்டிய விடயம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த விடயத்தில் ஆர்வம் காட்டியுள்ள போதிலும் பசில்ராஜபஷ இன்னமும் இந்த விடயத்தில் தனது விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ,நாங்கள் இன்னமும் அவரின் தீர்மானத்திற்காக காத்திருக்கின்றோம்,அவருக்கு இது குறித்து தீர்மானிப்பதற்கு மேலும் காலம் தேவைப்படுகின்றது போல தோன்றுகின்றது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago