Skip to main content

வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்!

Nov 14, 2020 236 views Posted By : YarlSri TV
Image

வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்! 

வாகனத் திருட்டு ஈடுபட்டுவரும் கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.



இந்நிலையில் செஞ்சி போலீசார் விநாயகபுரம் கூட்டுசாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிற்றரசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பிடித்த போலீசார் அவரிடம் வழக்கம் போல ஆவணங்கள் குறித்து விசாரித்தனர். அவரிடம் வாகனத்திற்கான எந்த ஆவணமும் இல்லை என்று தெரிகிறது அத்துடன் அவர் மாற்றி மாற்றி பதில் கூறி வந்துள்ளார். இதனால் போலீசார் அவரிடம் துருவி துருவி கேள்வி எழுப்பியதில் அவர் செஞ்சி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



சிற்றரசன் ஓட்டி வந்த வாகனத்துடன் சேர்த்து மூன்று வாகனங்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை