பூந்தமல்லியில், மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்!
Nov 19, 2020 254 views Posted By : YarlSri TV
பூந்தமல்லியில், மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்!
சென்னை அடுத்த பூந்தமல்லியில், மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.பூந்தமல்லி, ரைட்டர் தெருவில் வசித்து வந்தவர் சேர்ந்தவர் நூர்தீன். பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வரும் அவர், மனைவி அசினா பேகம், மகன் அல்தாப் உடன் வசித்து வந்துள்ளார். மகளுக்கு திருமணம் செய்து, அவரும் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை நூர்தீன் மகள், தனது தாய்க்கு செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தந்தைக்கு போன் செய்த நிலையில் அவரும் எடுக்கவில்லை என தெரிகிறது.
சந்தேகமடைந்த அவர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது அசினா பேகம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் தனது தாயை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
அசினா பேகத்தின் கழுத்து நெரிக்கப்பட்ட தடயமும், முகத்தில் காயங்களும் இருந்ததால், அவரை யாரோ கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக போலீசார் கண்டறிந்தனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், அதன் காரணமாக மனைவியை கொலை செய்துவிட்டு நூர்தீன் தப்பிச் சென்று இருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது. நூர்தீன் எதற்காக கொலை செய்தார் என்பது தெரியாத நிலையில், போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1462 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1462 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago