Skip to main content

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மருத்துவக் கலந்தாய்வில் எந்த குளறுபடியும் இல்லை என தெரிவித்தார்!

Nov 19, 2020 234 views Posted By : YarlSri TV
Image

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மருத்துவக் கலந்தாய்வில் எந்த குளறுபடியும் இல்லை என தெரிவித்தார்! 

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மருத்துவக் கலந்தாய்வில் எந்த குளறுபடியும் இல்லை என தெரிவித்தார்.



ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே இருக்கும் கூடக்கரை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்றுக் கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், ஆம்புலன்ஸை கொடியசைத்து துவக்கி வைத்தார்.



அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுவரை நீட் பயிற்சிக்கு 18,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.



மேலும், ” தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை. கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்க கோரப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு கலந்தாய்வில் எந்த குளறுபடியும் இல்லை. பள்ளிகள் திறப்பு குறித்து கலந்தாலோசித்த பிறகு முதல்வர் அறிவிப்பார்” என்றும் தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை