இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் அரசியல் நாடகங்களை அரங்கேற்றுவதில் தான் ட்ரம்ப் முக்கியத்துவம் அளித்து வருகின்றார். இருப்பினும் தனது தோல்வியை ட்ரம்ப் இதுவரை ஏற்கவில்லை. வாக்குப்பதிவில் குளறுபடிகள் நடந்திருப்பதாக திசை திருப்ப பார்க்கிறார். இந்தியாவில் ட்ரம்பிற்கு எத்தகைய சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது.
தவறான நபர்களுடன் உடன் நிற்பது நமது கலாச்சாரம் இல்லை. இருப்பினும் நாம் அவ்வாறு நின்றோம். அமெரிக்காவின் தலைமைப் பொறுப்பிற்கு ஜோ பைடன் விரைவில் பதவியேற்க உள்ளார். துணை அதிபர் பதவிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடைய சாதனைகளை ட்ரம்ப் கண்டிக்கும் வகையில் பேசியுள்ளார்.
இதன்மூலம் ஒரு பெண்ணிற்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. அமெரிக்க மக்கள் தங்கள் தவறை திருத்திக் கொண்டு டிரம்பிற்கு பை பை சொல்லிவிட்டனர்.பிஹார் மாநிலத்தை ஆளும் அரசும் இப்படியொரு நிலையில் தான் இருக்கிறது. நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தோல்வியை தழுவப் போவது உறுதி.
எங்களைத் தவிர இந்த தேசத்திற்கு மாற்று வேறும் யாருமில்லை. தற்போது நமது நாட்டின் தகுதியற்ற தலைவர்களை தூக்கி எறியும் செயலில் பொதுமக்கள் ஈடுபட வேண்டும் என்று சாமனா பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
ட்ரம்ப் தோல்வியில் இருந்து பாடம் கத்துக்குங்க; குட்டு வைக்கும் சிவசேனா
Nov 09, 2020 301 views Posted By : YarlSri TV
ட்ரம்ப் தோல்வியில் இருந்து பாடம் கத்துக்குங்க; குட்டு வைக்கும் சிவசேனா
அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்பின் தோல்வியில் இருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக ’சாமனா’ செயல்பட்டு வருகிறது. இதில் வெளியாகியுள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு நாட்டிற்கு தலைமை பதவி வகிக்கும் அளவிற்கு அதிபர் ட்ரம்பிற்கு தகுதி இல்லை. இதனை அமெரிக்க மக்கள் நன்கு உணர்ந்து கொண்டனர். அதிபர்ட்ரம்ப் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நாம் ட்ரம்பின் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டால் நல்லது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை விட வேலையின்மை பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago