Skip to main content

கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர்

Nov 08, 2020 240 views Posted By : YarlSri TV
Image

கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் 

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.



கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் நேற்று முன்தினம் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.



இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.



அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 400 பேர் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர். பேலியகொடை கொத்தணியை சேர்ந்தவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



இதனால் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணியில் கண்டறியப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 9,492 ஆக அதிகரித்துள்ளது.



நாட்டில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12,970 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 563 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7186 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுக்குள்ளானோரில் 5754 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 196 பேர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட கைதிகள் 23 பேரும், வெலிகந்த மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.



இதேவேளை, கடல் தொழில் கூட்டு நிறுவனத்தின் ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கடல் தொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை