Skip to main content

24 மணி நேரத்தில் 45,673 பேர் கொரோனாவால் பாதிப்பு...!

Nov 08, 2020 235 views Posted By : YarlSri TV
Image

24 மணி நேரத்தில் 45,673 பேர் கொரோனாவால் பாதிப்பு...! 

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.24 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 84 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக  பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:



* புதிதாக 45,673 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 85,07,754 ஆக உயர்ந்தது.

* புதிதாக 559 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,26,121 ஆக உயர்ந்தது.



* தொற்றில் இருந்து ஒரே நாளில் 49,083 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 78,68,968 ஆக உயர்ந்துள்ளது.



* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,12,665 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 92.49% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.48% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 6.03% ஆக குறைந்துள்ளது.



* இந்தியாவில் ஒரே நாளில் 11,94,487 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

* இதுவரை 11,77,36,791 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை