தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்!
Nov 12, 2020 269 views Posted By : YarlSri TV
தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்!
தமிழகத்தில் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி திருவண்ணாமலை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் வேலைவாய்ப்பு, மற்றும் பயிற்சி இணை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியராக மீன்வளத் துறை மேலாண்மை இயக்குநராக இருந்த எஸ். சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி (பொறுப்பு) இயக்குநராக இருந்த விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை இணை ஆணையராக இருந்த மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குநராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணைச் செயலாளராக இருந்த ஏ.ஆர். கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக கே. செந்தில் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷில்பா பிரபாகர் சதீஷ், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜே. ஜெயகாந்தன், மீன் வளர்ச்சி கழக இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.கே. அருண் சுந்தர் தயாளன், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த கே.எஸ். கந்தசாமி, இ-சேவை, குறைதீர் அமைப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை இணை ஆணையராக எஸ். திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குநராக ஜெஸிந்தா லாசரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago