யாழ்ப்பாணம்- வேலணைபிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது !
Nov 11, 2020 223 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாணம்- வேலணைபிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது !
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குற்பட்ட யாழ்ப்பாணம்- வேலணைபிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ளது .வேலணை பிரதேச சபையின்,
வரவு செலவுத் திட்டத்திற்கான விசேட கூட்டம் இன்றையதினம் சபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இடம்பெற்றிருந்தது.வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 10உறுப்பினர்களும், எதிராக 9 உறுப்பினர்களும் வாக்களித்த அதே வேளை ஒரு உறுப்பினர் நடுநிலமை வாகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 6 உறுப்பினர்கள், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 2 உறுப்பினர்கள்,
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 10 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு உறுப்பினர் என 9 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்த அதே வேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்திருந்தார்.
20 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 8 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக 6 உறுப்பினர்களும்,
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்ணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி
சார்பாக தலா ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றனர்.
குறித்த பிரதேச சபையின் 2020 ஆம், மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago