மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தக நிலையத்தில் பாரிய தீவிபத்தினால் கடை உரிமையாளர் படுகாயம்!
Nov 03, 2020 242 views Posted By : YarlSri TV
மட்டக்களப்பு காத்தான்குடி வர்த்தக நிலையத்தில் பாரிய தீவிபத்தினால் கடை உரிமையாளர் படுகாயம்!
மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் கடை உரிமையாளர் படுகாயமடைந்ததுடன் பல கோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
குறித்த விபத்து இன்று (03) செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வர்த்தக நிலையத்தினுள் ஏற்பட்ட பாரிய தீயினைக் கட்டுப் படுத்த பாரிய முயற்சியினை மேற்கொண்ட போதிலும் சுமார் இரு மணி நேரத்திற்கும் அதிகமாக தீயைக் கட்டுப்பாட்டினுள் கெண்டுவர முடியாது பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமான குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு முகவர் நிலையமுமாகும். இதனால் அயல்வாசிகள் தமது வீடுகளை விட்டு சில மணிநேரம் வெளியேறியதையும் அவதானிக்க முடிந்தது.
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான பாதையை மூடிய காவல்துறையினர் போக்கு வரத்திற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்தினர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1475 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1475 Days ago