தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட்டை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது!
Nov 03, 2020 282 views Posted By : YarlSri TV
தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட்டை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது!
ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு, தீயணைப்புத்துறை பணியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில், தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் சைலேந்திர பாபு ரேஷன் பொருள் கடத்தல் டிஜிபி பணியை கவனிப்பார் என்றும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த துரைகுமார் ஐபிஎஸ் சென்னை காவல்துறை நிர்வாக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பல்வேறு முக்கிய வழக்குகளில் பங்கேற்று, சர்ச்சையில் சிக்கிய ஜாபர் சேட், 2019ம் ஆண்டு சிபிசிஐடி இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1441 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1441 Days ago