Skip to main content

தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட்டை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது!

Nov 03, 2020 282 views Posted By : YarlSri TV
Image

தமிழக தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட்டை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது! 

ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு, தீயணைப்புத்துறை பணியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில், தீயணைப்புத்துறை டிஜிபியாக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் சைலேந்திர பாபு ரேஷன் பொருள் கடத்தல் டிஜிபி பணியை கவனிப்பார் என்றும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த துரைகுமார் ஐபிஎஸ் சென்னை காவல்துறை நிர்வாக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.



பல்வேறு முக்கிய வழக்குகளில் பங்கேற்று, சர்ச்சையில் சிக்கிய ஜாபர் சேட், 2019ம் ஆண்டு சிபிசிஐடி இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை