வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று (03) மரநடுகைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது!
Nov 03, 2020 324 views Posted By : YarlSri TV
வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று (03) மரநடுகைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது!
மருதம் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று (03) மரநடுகைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த மரநடுகைத்திட்டத்திற்கு வர்த்தகர்கள், தனிநபர்கள், இயற்கை ஆர்வலர்கள் அனுசரணை வழங்கியுள்ளதுடன், அவற்றினை வளர்த்து பராமரிக்கும் பணிகளை மருதம் பசுமை இயக்கம் இரண்டு வருடங்களிற்கு தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளது.
முதற்கட்டமாக 700 மரங்கள் ஈச்சங்குளம், கிடாச்சூரி மற்றும் தேவகுளம் பிரதான வீதிக்கரைகளின் இருமருங்கிலும் நாட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப நிகழ்வில் வவுனியா கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் இ.விஜயகுமார், விவசாய திணைக்கள விதைகள் மற்றும் நடுகை பிரிவு பிரதிப்பணிப்பாளர் யோகஸ்வரன், மருதம் பசுமை இயக்கத்தின் நிறுவுனர் வேலுப்பிள்ளை தனபாலசிங்கம், வனவளத்திணைக்கள உத்தியோகத்தர்கள், சுற்றாடல் அதிகாரசபையினர், சமூக ஆர்வலர்கள், இயற்கை நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago