மு.க.ஸ்டாலின், ஆலயத்தில் கொடுத்த விபூதியை நெற்றியில் பூசாமல் கீழே கொட்டியது பெரும் சர்சை!
Nov 01, 2020 233 views Posted By : YarlSri TV
மு.க.ஸ்டாலின், ஆலயத்தில் கொடுத்த விபூதியை நெற்றியில் பூசாமல் கீழே கொட்டியது பெரும் சர்சை!
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 113ஆவது ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன் ஆலயத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆலயத்தில் கொடுத்த விபூதியை நெற்றியில் பூசாமல் கீழே கொட்டியது பெரும் சர்சை ஆகியிருக்கிறது.
ஸ்டாலினின் இந்த செயல் முத்துராமலிங்க தேவரின் பக்தர்களையும், இந்துக்களையும் அவமதித்துவிட்டதாக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
’’தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவமரியாதையாக நடந்ததை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்கிறார் தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் நிறுவனர் கே.சி.திருமாறன். மேலும், ’’முத்துராமலிங்க தேவர் ஆலயத்தில் வழங்கிய திருநீரை நெற்றியில் பூசாமல் ஆலயத்தில் உள்ளேயே தட்டிவிட்டுச் சென்றது தேவரின் பக்தர்கள், இந்துமதத்தினர் அனைவரின் மனதும் புண்படும்படியாக இருக்கிறது. இறை நம்பிக்கையற்ற கட்சியாக தன்னை காட்டிக்கொள்கின்ற திமுக இது போன்ற ஆன்மீக தளங்களுக்கு வராமல் இருப்பது மேல்’’என்கிறார்.
முத்துராமலிங்க தேவர், தேவர் சமூகத்திற்கு மட்டும் போராடியது போல் குறுகிய எண்ணத்தில் சிறுமைப்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்து வரும் ஸ்டாலின் குற்றப்பரம்பரை சட்டம் என்பதை குற்றப்பத்திரிகை என உளறிவருவதையும் வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கெல்லாம் ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’’என்று எச்சரிக்கிறார்.
பசும்பொன்னில் தவறாக நடந்துகொண்ட ஸ்டாலினை கண்டித்து தேவ இன அமைப்புகளை ஒன்று திரட்டி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த விருக்கிறோம்’’ என்கிறார் தென்நாடு மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் எஸ். கணேசத்தேவர். அவர் மேலும், ‘’தேவர் திருமகனாரை இழிவுபடுத்திய எந்த அரசியல் கட்சியும் தமிழகத்தில் ஆட்சி செய்ததாக சரித்திரம் இல்லை. தேவர் இன மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கிக்கொண்டிருக்கும் அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலர்ந்திடும்’’என்கிறார்.
முத்துராமலிங்க தேவரின் விபூதியை பூசாமல் கிழே கொட்டி மெத்தனம் காட்சிய ஸ்டாலின் சார்ந்த திமுகவிற்கு தேவரின சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஓட்டும் கிடைக்காது என்று எச்சரிக்கிறோம்’’ என்கிறது தமிழ்நாடு மூவேந்தர் பண்பாட்டுக்கழகம். மேலும், ’’நடந்த செயலுக்கு ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க தவறினால் எங்கள் இன மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறூம் என்பதை தெரியப்படுத்துகிறோம்’’என்கிறது.
அனைத்து தேவர் சமுதாய மக்களும் ஸ்டாலின் செயல்பாட்டால் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். இத்தகையை கீழ்த்தரமான செயலை செய்த ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் வரும் காலங்களில் அவரை பசும்பொன்னுக்குள் அனுமதிக்க மாட்டோம்’’என்று எச்சரிக்கிறது அப்பநாடு மறவர் சங்கம்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago