Skip to main content

காத்திருக்கும் ஒற்றை யானை’.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

Nov 07, 2020 246 views Posted By : YarlSri TV
Image

காத்திருக்கும் ஒற்றை யானை’.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை! 

சத்தியமங்கலம் அருகே கரும்பு லாரியை எதிர்பார்த்து ஒற்றை யானை ஒன்று காத்திருப்பதால், வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பண்ணாரி வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக இருக்கின்றன. காட்டில் இருந்து உணவு தேடி குடியுருப்பு பகுதிகளுக்கு செல்லும் யானைகள், லாரியில் இருந்து வீசப்படும் கரும்புகளை சாப்பிட்டு பழகியதால் பண்ணாரி சோதனை சாவடி அருகே முகாமிடுகின்றன.



இந்நிலையில் கரும்பு லாரியை எதிர்பார்த்து பண்ணாரி கோவில் அருகே மக்னா யானை ஒன்று, நெடுநேரமாக காத்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். பண்ணாரி சோதனைச்சாவடி அருகே அந்த யானை நின்று கொண்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், நெடுநேரம் காத்திருந்த பிறகு அந்த யானை காட்டுக்குள் சென்று விட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மேலும், பண்ணாரி முதல் ஆசனூர் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை