அதிரடிப்படையினராலும் , காவல்துறையினரால் மாவட்ட செயலகத்துக்கு பாதுகாப்புக்கு!
Nov 07, 2020 270 views Posted By : YarlSri TV
அதிரடிப்படையினராலும் , காவல்துறையினரால் மாவட்ட செயலகத்துக்கு பாதுகாப்புக்கு!
கிராமிய பொருளாதார அபிவிருத்தி குழுக்கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் குண்டு செயலிழப்பு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர் , காவல்துறை பிரிவினர் ஆகியோரினால் மாவட்ட செயலகத்தில் பாதுகாப்புக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய குறித்த கூட்டம் இன்று (07) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ , வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த , கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா , மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்பல ஆகியோர் குறித்த கூட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.
மேலும் குறித்த கூட்டத்தில் வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் , குலசிங்கம் திலீபன் , செல்வம் அடைக்கலநாதன் , சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் , மாவட்ட அரச அதிபர்கள் , பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago