Skip to main content

அதிரடிப்படையினராலும் , காவல்துறையினரால் மாவட்ட செயலகத்துக்கு பாதுகாப்புக்கு!

Nov 07, 2020 270 views Posted By : YarlSri TV
Image

அதிரடிப்படையினராலும் , காவல்துறையினரால் மாவட்ட செயலகத்துக்கு பாதுகாப்புக்கு!  

கிராமிய பொருளாதார அபிவிருத்தி குழுக்கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் குண்டு செயலிழப்பு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர் , காவல்துறை பிரிவினர் ஆகியோரினால் மாவட்ட செயலகத்தில் பாதுகாப்புக்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.



வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய குறித்த கூட்டம் இன்று (07) வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.



நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ , வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த , கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா , மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்பல ஆகியோர் குறித்த கூட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.



மேலும் குறித்த கூட்டத்தில் வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் , குலசிங்கம் திலீபன் , செல்வம் அடைக்கலநாதன் , சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் , மாவட்ட அரச அதிபர்கள் , பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை