Skip to main content

மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்!

Nov 04, 2020 246 views Posted By : YarlSri TV
Image

மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்! 

ஈரோட்டில் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர். பெண்களை இழிவாக சித்தரிக்கும் மனுதர்ம நூலை தடை செய்யக்கோரி, ஈரோட்டில் திராவிடர் பேரவை சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்த அமைப்பின் தலைவர் மாசிலாமணி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கவும், திருமாவளவன் மீது பதிவுசெய்யப்பட்ட



வழக்கை ரத்து செய்யவும் வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, போராட்டக்காரர்களை போலீசார் கைதுசெய்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை