Skip to main content

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த தாய் மற்றும் மகனை போலீசார் கைதுசெய்தனர்!

Nov 04, 2020 278 views Posted By : YarlSri TV
Image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த தாய் மற்றும் மகனை போலீசார் கைதுசெய்தனர்! 

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டையில் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த தாய் மற்றும் மகனை போலீசார் கைதுசெய்தனர்.



உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் பகுதியில் வீட்டில் கஞ்சாவை பதுக்கிவைத்து, விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



அதன்பேரில், கந்தசாமிபுரம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடிசோதனையில் சாய்ராபானு என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சாய்ராபானு(42) மற்றும் அவரது மகன் அசேன் முகமது(24) ஆகியோரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து விற்பனை செய்வதற்காக பதுக்கிவைத்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை