தொழிலாளர்களுக்கு சாதகமான திருத்தங்களை கொண்டு வர கோரி ஆர்ப்பாட்டம்!
Oct 28, 2020 210 views Posted By : YarlSri TV
தொழிலாளர்களுக்கு சாதகமான திருத்தங்களை கொண்டு வர கோரி ஆர்ப்பாட்டம்!
மாற்றியமைக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட பி.எம்.எஸ் சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நம்மிடம் பேசியபோது, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமான தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு பெற வரையறுக்கப்பட்டுள்ள சட்டங்கள் , தொழிலாளர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது.
ஆலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டங்களை அமல்படுத்த விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை புறந்தள்ளும் நோக்கத்தில் உள்ளது. மத்திய அரசு இயற்றியுள்ள சட்டங்களில் தொழிலாளர்களுக்கு சாதகமான விதி திருத்தங்கள் கொண்டுவர மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் தொழிலாளர்களுக்கு சாதகமான திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என அவர்கள் கூறினர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago