மீனவர்களின் அராஜகம்; 10 குமரி மீனவர்களை மீட்கக்கோரி ஆட்சியரிடம் மனு!
Oct 28, 2020 228 views Posted By : YarlSri TV
மீனவர்களின் அராஜகம்; 10 குமரி மீனவர்களை மீட்கக்கோரி ஆட்சியரிடம் மனு!
குமரி மாவட்டம் கடியப்பட்டணம், மணக்குடி, போன்ற பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து 10 மீனவர்கள் கடந்த 19ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வேப்பூர் பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கர்நாடக மாநிலம் மால்பே என்னும் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாநிலத்தைச் சேர்ந்த 10 விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் இவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பின்னர் அவர்களை பிணைக் கைதிகளாக்கி கர்நாடகாவிற்கு அழைத்துச்சென்று கர்நாடகா கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர். 10 குமரி மீனவர்களும் கர்நாடக மீனவர்களை ஆயுதங்களுடன் தாக்கியதாக பொய் வழக்கு பதிவு செய்து உடுப்பி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை. இதனையடுத்து இன்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பு நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து உடனடியாக குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago