Skip to main content

பாஜகவினரை தாக்கிய விசிகவினர் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்!

Oct 28, 2020 229 views Posted By : YarlSri TV
Image

பாஜகவினரை தாக்கிய விசிகவினர் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்! 

மனுநூலில் பெண்களை இழிவு செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சமீபத்தில் பேசியிருந்தார். இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து திருமாவளவன் ஈரோடு மாவட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல நிகழ்வுக்குச் சென்றார். அங்கு, அவருக்கு எதிராக பாஜகவினர் கருப்புக்கொடி காட்ட முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் பாஜகவினரை கண்டித்தும் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.



இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பாண்டியம்மாள் உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர்ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்டனர்.அப்போது அங்கு பாஜகவின் ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் ஆனந்த ஜெயம் உள்ளிட்ட 50ற்கும் மேற்பட்டோர் கூடினர். அப்போது இருகட்சியினர் இடையே மோதல் வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இருதரப்பினர் மீதும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.



இந்நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவினரை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெண் உட்பட 29 விசிகவினைரையும் நவம்பர் 10ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை