நகைப்பட்டறை கொள்ளையில், முக்கிய குற்றவாளி மார்கெட் சுரேஷ் கைது!
Oct 27, 2020 217 views Posted By : YarlSri TV
நகைப்பட்டறை கொள்ளையில், முக்கிய குற்றவாளி மார்கெட் சுரேஷ் கைது!
சென்னை நகைப்பட்டறையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மார்கெட் சுரேஷை, திருவள்ளூர் மாவட்ட தனிப்படை போலீசார் கைதுசெய்தனர். சென்னை தியாகராய நகரில் உள்ள நகைப்பட்டறை ஒன்றில், கடந்த வாரம் 4 கிலோ தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து நகைக்கொள்ளையில் ஈடுபட்ட கோடம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் என்கிற மார்க்கெட் சுரேஷை, தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர் அடுத்த புட்லூர் பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருவள்ளூர் மாவட்ட தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது புட்லூர் பகுதியில் கூவம் ஆற்றில் பதுங்கியிருந்த மார்க்கெட் சுரேஷை, கைதுசெய்த போலீசார் அவனிடம் இருந்து 7 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, கடம்பத்தூர் காவல் நிலையத்தில் வைத்து மார்கெட் சுரேஷிடன் 4 மணிநேரம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, சென்னை போலீசாரும் விசாரணை செய்த நிலையில், வளசரவாக்கம் மற்றும் ராமாபுரம் போலீசார் விசாரணைக்காக அவரை சென்னை அழைத்து சென்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago