Skip to main content

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற தனியார் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 9 பேர் படுகாயம்!

Oct 29, 2020 295 views Posted By : YarlSri TV
Image

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற தனியார் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 9 பேர் படுகாயம்! 

ஓசூர் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்ற தனியார் பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 9 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் சேட்டான்டஹள்ளி பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர், நேற்று இரவு தனியார் பேருந்து மூலம் ஓசூரை அடுத்துள்ள கேரட்டி கிராமத்திற்கு திருமண விழாவிற்கு சென்றுள்ளனர். நள்ளிரவில் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது திடீரென ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில், பேருந்திலிருந்த 60-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தனர்.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அஞ்செட்டி போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பலத்த காயமடைந்த 9 பேர் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று திரும்பினர். விபத்து குறித்து அஞ்செட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை