Skip to main content

பேரூராட்சி பகுதிக்கும் 100 நாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்!

Oct 28, 2020 251 views Posted By : YarlSri TV
Image

பேரூராட்சி பகுதிக்கும் 100 நாள் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்! 

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பேரூராட்சி பகுதிக்கும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி சட்டத்தை விரிவுபடுத்தி பேரூராட்சி பகுதிக்கும் வேலை வழங்க வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் சலங்கபாளையம் பேரூராட்சி முன்பு 28.10. 2020 காலை 10.30மணியளவில் தாலுகா செயலாளர் தோழர் எஸ். மாணிக்கம் தலைமையில் ஆர்பாட்டம் நடத்தி 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தார்கள்.



இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் ஆர் விஜயராகவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ஜி பழனிசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் A.ஜெகநாதன். தோழர் எம் ஆர் பெரியசாமி .கே ஆர் சண்முகம். பி மாதையன் .மாவட்ட குழு உறுப்பினர் A.ஆறுமுகம் SFIமாவட்டத் தலைவர் எம் .வினிஷா தோழர் கே. பொன்னுசாமி உட்பட ஆறுநூறு மேல் மேல் 600க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு 1000.மனுக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் வழங்கப்பட்டது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை