கடை திறக்க எதிர்ப்பு – பெண்கள் முற்றுகை போராட்டம்
Oct 22, 2020 263 views Posted By : YarlSri TV
கடை திறக்க எதிர்ப்பு – பெண்கள் முற்றுகை போராட்டம்
நாகை மாவட்டத்தில் விளை நிலங்களுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழையூரை அடுத்த பாலகுறிச்சி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட டாஸ்மாக் கடை இன்று திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இதையறிந்த, சுற்றுவட்டார
கிராம பொதுமக்கள், மதுபான கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் கடையை திறந்தால், விளைநிலங்கள் பாதிப்பதுடன், விவசாய வேலைக்கு வரும் இளைஞர்கள் மதுபோதைக்கு அடிமையாக நேரிடும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாத நிலையில், மதுக்கடையை திறக்காமல் டாஸ்மாக் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago