அதிமுக – திமுகவினர் இடையே தகராறு : 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 604 பேர் மீது வழக்குப் பதிவு!
Oct 22, 2020 213 views Posted By : YarlSri TV
அதிமுக – திமுகவினர் இடையே தகராறு : 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 604 பேர் மீது வழக்குப் பதிவு!
ஒரே இடத்தில் உள்ள கொடிக்கம்பங்களில் கொடியேற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 604 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். இதனால் திமுக விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றுவதற்கு திமுகவினரால் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு போலீசார் அனுமதி அளித்த நிலையில் 200 பேர் மட்டுமே கூட வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதே கொடிக்கம்பத்தில் கொடியேற்ற அதிமுகவினரும் அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி அதிமுகவினர் கொடி ஏற்ற தயாராக இருந்துள்ளனர். இதனால் அங்கு திமுக – அதிமுகவினர் அதிகளவில் கூடினர்.
இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் திமுக கொடி ஏற்றப்பட்டது. அப்போது விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஏடிஎஸ்பி கோபி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அந்த கொடி கம்பத்தில் அதிமுக கொடியை அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் ஏற்றினார். இதன்பின்னர் அதிமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த தள்ளுமுள்ளுவில் டி.எஸ்.பி கலைகதிரவனுக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் விளாத்திக்குளத்தில் ஒரே இடத்தில் உள்ள கொடிக்கம்பங்களில் கொடியேற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினையால் 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 604 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவன், அதிமுக எம்.எல்.ஏ. சின்னப்பன் உள்பட 604 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1462 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1462 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1463 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1463 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago