Skip to main content

தமிழகத்தில் இன்று முதல் இரவு 10மணிவரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி!

Oct 22, 2020 305 views Posted By : YarlSri TV
Image

தமிழகத்தில் இன்று முதல் இரவு 10மணிவரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி! 

தமிழகத்தில் இன்று முதல் இரவு 10மணிவரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய வியாபாரிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.



பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள் திறப்பு நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறி, டீ, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள்,வணிக வளாகங்களுக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.



நோய் தொற்று கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதியில் இரவு 10 மணிவரை கடைகள் இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.



முன்னதாக கொரோனா பேரிடர் காலத்தினால் அரசு பல கட்டுப்பாடுகளை கடந்த 6 மாத காலமாக விதித்திருந்தது. இதையடுத்து தமிழக அரசு ஊரடங்குடன் கூடிய தளர்வுகளை அறிவித்தது. அதில் தமிழகத்தில் இயங்கி வரும் கடைகள், பொது போக்குவரத்து சேவை, கோயில்கள் என பலவற்றிற்கும் அனுமதியளித்தது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை