திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோரலவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது!
Oct 23, 2020 248 views Posted By : YarlSri TV
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோரலவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது!
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சமன் தர்சன பாண்டிகோரலவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1991ம் ஆண்டு கணக்காய்வாளர் திணைக்களத்தில் கணக்காய்வு பரீட்சகராக கடமையாற்றி இவர் 1997ம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து கணக்காளர் சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டதுடன் பின்னர் 1998ம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைப்பரீட்சையில் சித்திபெற்று இச்சேவையினுள் இணைந்து கொண்டார்.
முதல் நியமனமாக காலி மாவட்டத்தின் போபே-பொத்தல, அக்மீமன, ஹபராதுவ ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், பின்னர் தென்மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும், அதன்பின்னர் தென்மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகவும் பதவி வகித்தார்.
தென்மாகாண முதலமைச்சரின் செயலாளராக பதவி வகிக்க முன்னர் தென்மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
காலி ரிச்மன்ட் கல்லூரியின் பழைய மாணவரும், றுஹுனு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியுமான இவர் எதிர்வரும் 26ம் திகதி தம் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago