முன்பகை காரணமாக திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
Oct 23, 2020 321 views Posted By : YarlSri TV
முன்பகை காரணமாக திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பன் என்ற அருண்குமார். இவர் திண்டுக்கல் மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களும் செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு சிலரிடையே முன்பகை இருந்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று 22.10.20 இரவு மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே அருண் வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை சுற்றிவளைத்து கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளனர். இதில் அருண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மேட்டுப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago