Skip to main content

முக மூடி அணிந்து மூன்று படகில் சுற்றிவளைத்து சரமாரியான தாக்குதல்!

Oct 22, 2020 230 views Posted By : YarlSri TV
Image

முக மூடி அணிந்து மூன்று படகில் சுற்றிவளைத்து சரமாரியான தாக்குதல்! 

முக மூடி அணிந்து மூன்று படகில் சுற்றிவளைத்து சரமாரியான தாக்குதல்.



பருத்தித்துறை எரிஞ்ச அம்மன் கோவிலடியை சேர்ந்த இருவருக்கு கடலில் வைத்து சுற்றி வளைத்து  சரமாரியான சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது.



நேற்று பிற்பகல் கடல் தொழிலுக்காக பருத்தித்துறை எரிஞ்ச அம்மன் கோவிலடியிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர்  தொலைவில் நாகர்கோவில் கடல்  பகுதியில் மூன்று படகுகளில் வந்த முகமூடி அணிந்த ஒன்பது  பேர் தொழிலில் ஈடுபட்ட இருவரையும் சுற்றி வளைத்து இரவு 7:00 மணியிலிருந்து அதிகாலை இரண்டு மணிவரை கடுமையாக தாக்கியுள்ளனர். 



அவர்கள் தாக்குதல் நடாத்தும் போது நீங்கள் தானே எம்மை கடலட்டை தொழில் செய்ய விடாது தடுத்தது, என கேட்டுக் கேட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்த 45000/-  பெறுமதியான ஜீபிஎஸ் நங்கூரம் உட்பட்ட பொருட்களையும் பறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இரிவரும் ஒருவாறாக படகுடன் கரை வந்து சேர்நஸதுள்நணர். இது தொடர்பாக இருவரும் பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் இருவரும் பருத்தித்துறை ஆதார மருத்துவ. மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது  தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை