Skip to main content

ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Oct 16, 2020 227 views Posted By : YarlSri TV
Image

ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! 

கடலூர் மாவட்டம் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற செயலாளர் சிந்துஜாவை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ததை கண்டித்து நாகையில் ஊராட்சி செயலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்



ஈடுபட்டனர். நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்துகொண்டு, சிந்துஜா மீதான வன்கொடுமை வழக்கை வாபஸ் பெறவும், பெண் ஊராட்சி தலைவர்களுக்கு பதிலாக கணவர் மற்றும் உறவினர்கள் செயல்படுவதை தடை செய்தல்



உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர் இதனிடையே, நாகை மாவட்டத்தில் 434 ஊராட்சிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஊராட்சி ஒன்றிய

அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை