Skip to main content

ஜெசிந்தா ஆர்டனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்!

Oct 19, 2020 335 views Posted By : YarlSri TV
Image

ஜெசிந்தா ஆர்டனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்! 

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றிப் பெற்று பிரதமராக தெரிவான ஜெசிந்தா ஆர்டனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.



இது குறித்து தனது ருவிட்டரில் இன்று (19) பதிவிட்டுள்ள ஜனாதிபதி, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அவரின் தலைமைத்துவம் முன்மாதிரியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.



நியூசிலாந்தில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டனின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 வீத வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான தேசியக் கட்சி 27 வீத வாக்குகளை மட்டுமே பெற்றது.



இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஜெசிந்தாவின் ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது.



இதேவேளை, நியூசிலாந்தின் பிரதமராக இரண்டாவது முறையாகப் பதவியேற்கவுள்ள ஜெசிந்தாவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை