Skip to main content

சென்னை ஆவடி பகுதியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது!

Oct 18, 2020 217 views Posted By : YarlSri TV
Image

சென்னை ஆவடி பகுதியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது! 

சென்னை ஆவடி பகுதியில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைதுசெய்தனர். சென்னையை அடுத்த ஆவடி கவரப்பாளையத்தை சேர்ந்தவர் பபீன் (29). கடந்த 14ஆம் தேதி அன்று



இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பபீனிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதுதொடர்பாக புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த, ஆவடி காவல் ஆய்வாளர் ராஜாகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார்,



வழிப்பறி சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் திருநின்றவூரை சேர்ந்த் சுரேஷ்(19) மற்றும் ரிஷி(20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை