Skip to main content

பருவமழையின்போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி!

Oct 18, 2020 212 views Posted By : YarlSri TV
Image

பருவமழையின்போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி! 

நாகை அருகே வடகிழக்கு பருவமழையின்போது ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி

நடைபெற்றது. நாகை மாவட்டம் திருக்கண்ணங்குடி பகுதியில் நடைபெற்ற இந்த



ஒத்திகை நிகழ்ச்சியில், வெள்ளத்தில் சிக்கி கொள்பவர்களை எவ்வாறு மீட்பது மற்றும் முதலுதவி அளிப்பது குறித்து செயல்விளக்க காட்சிகள், தன்னார்வல குழுக்கள் மூலம் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வெள்ளம்,



புயல் போன்ற இயற்கை சீற்றங்களினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்வது மற்றும் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்தும் கருவிகளை கையாளுவது குறித்தும் பயிற்சியையும் கீவளூர் தீயணைப்புவீரர்கள், தன்னார்வல குழுக்களுக்கு சொல்லிக் கொடுத்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை