வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டு 141 சிறிய குளங்களின் திருத்த வேலைகள் - இ. விஜயகுமார்
Oct 14, 2020 241 views Posted By : YarlSri TV
வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டு 141 சிறிய குளங்களின் திருத்த வேலைகள் - இ. விஜயகுமார்
வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டு 141 சிறிய குளங்களின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் இ. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள குளத் திருத்த வேலைகள் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைளை மேலும் விருத்தி செய்து விவசாயிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு அமைவாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்த்தில் உள்ள குளங்களை புனரமைத்து அதனை விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் இவ்வாண்டு 29.4 மில்லியன் ரூபாய் செலவில் 141 சிறிய குளங்களின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 105 சிறிய குளங்களில் திருத்த வேலைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு 34 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது. அந்நிதியை அரசாங்கத்திடம் இருந்து பெற்று குறித்த குளங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாயிகளும் குளங்களை பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
16 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
16 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
16 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago