ரிசாட் பதியூதீனை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆறு குழுக்கள்!
Oct 14, 2020 271 views Posted By : YarlSri TV
ரிசாட் பதியூதீனை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆறு குழுக்கள்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியூதீனை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஆறு குழுக்கள் அவரின் இல்லத்திற்கு அனுப்பிவைக்க்பபட்டுள்ளதாக, காவல்துறை பேச்சாளரான, பிரதிக் காவல்துறைமாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூனின், மன்னார் மற்றும் கொழும்பிலுள்ள இல்லங்களுக்கு இந்த ஆறு குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, புத்தளத்தில் இருந்து மன்னார் வரையில் இலங்கை பேருந்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளில் இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம், பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை முதலான குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
இதன்படி, பிடியாணையை பெற்று அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் காவற்துறை மா அதிபருக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் பிடியாணை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தனர்.
இதன்போது, குறித்த கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் ப்ரியன்த லியனகே, பொது சொத்து சட்டத்தின் குற்றச்சாட்டின் கீழ் எவரையும் கைது செய்ய பிடியாணை அவசியமில்லை என குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தின் இந்த அறிவித்தலின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீனை கைதுசெய்யுமாறு சட்டமா அதிபர் காவற்துறைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago