மன்னாரின் பல பாகங்களிலும் இன்று (13) காலை 7.30 மணி முதல் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது!
Oct 13, 2020 248 views Posted By : YarlSri TV
மன்னாரின் பல பாகங்களிலும் இன்று (13) காலை 7.30 மணி முதல் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது!
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு கிராமங்கள் மூடப்பட்ட நிலையில் நேற்று (12) மாலை 6.30 மணியளவில் மீண்டும் குறித்த கிராமங்கள் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் மன்னாரின் பல பாகங்களிலும் இன்று (13) காலை 7.30 மணி முதல் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் காவற்துறையினர், விசேட அதிரடிப்படையினர், பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் மன்னார் நகர சபை ஆகியவை இணைந்து கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது மன்னார் பெரியகடை பகுதியில் மூடப்பட்ட வர்த்தக நிலையம், அதனை சார்ந்த பகதிகள், மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடம் மற்றும் பட்டித்தோட்டம் ஆகிய பகுதிகளில் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் பந்துல வீரசிங்க, மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன், மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கில்றோய் பீரிஸ் உற்பட விசேட அதிரடிப் படை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago