இலங்கைக்கு படகில் கடத்தவிருந்த 500 கிலோ மஞ்சள் மூடைகளை இந்தியக் கடலோரக் காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்!
Oct 13, 2020 256 views Posted By : YarlSri TV
இலங்கைக்கு படகில் கடத்தவிருந்த 500 கிலோ மஞ்சள் மூடைகளை இந்தியக் கடலோரக் காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்!
இராமநாதபுரம் – முயல் தீவில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்தவிருந்த 500 கிலோ மஞ்சள் மூடைகளை இந்தியக் கடலோரக் காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முயல் தீவில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்த இருப்பதாக மண்டபம் கடலோரக் காவற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காவற்படையினர் மன்னார் வளைகுடாவிலுள்ள தீவுகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, முயல்த் தீவில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூடைகள் மணலில் புதைத்து வைக்கபட்டிருந்தது தெரியவந்தது.
குறித்த மூடைகளை கைப்பற்றிய கடலோரக் காவற்படை இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் அடங்கிய 12 மூடைகளையும் கடலோரக் காவற்படை முகாமிற்கு கொண்டுசென்றனர்.
இதில், சுமார் 506 கிலோ மஞ்சள் இருந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த கடத்தல் தொடர்பில் மேலும் ஆராய்வதற்காக கரை ஓரங்களிலும் தீவுப் பகுதிகளிலும் கடலோரக் காவற்படையினர் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட மஞ்சள் மூடைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
23 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
23 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
23 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
23 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
23 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
23 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago