Skip to main content

ஊடகவியலாளர்கள் இருவர் மீதான தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களால் போராட்டம்!

Oct 15, 2020 220 views Posted By : YarlSri TV
Image

ஊடகவியலாளர்கள் இருவர் மீதான தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களால் போராட்டம்! 

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் மீதான தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்தப் போராட்டம், மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்னால் சமூக இடைவெளியைப் பேணி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று (15) காலை இந்தப் போராட்டம் நடைபெற்றது.



மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக அமையம் மற்றும் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகிய இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் இதன்போது, ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டோர், அனைத்து தரப்பினராலும் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம், இலங்கையில் அதிகரித்துவரும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், அடக்குமுறைகள், அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை