Skip to main content

2 நாட்களில் மட்டும் 34 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்!

Oct 14, 2020 213 views Posted By : YarlSri TV
Image

2 நாட்களில் மட்டும் 34 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்! 

தர்மபுரி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 2 நாட்களில் மட்டும் 34 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.



தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த மாதம் பிரவேஸ்குமார் ஐபிஎஸ் பொறுப்பேற்ற நிலையில், மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பற்றிய பட்டியலை சேகரிக்க, காவல்நிலையங்களுக்கு உத்தரவிட்டார்.



அவர்களில குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக இருப்பவர்கள் மற்றும் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவோரை கண்காணிக்கவும் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையில் மாவட்ட போலீசார் தீவிரம் காட்டி வந்த நிலையில், கடந்த இரு நாட்களில் அதிரடியாக 34 ரவுடிகளை போலீசார் கைதுசெய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் மட்டும் 493 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், ரவுடிகள் மீதான இந்த வேட்டை தீவிரமடையும் என்றும் தெரிவிக்கின்றனர்.



இதுகுறித்த கேள்விகளுக்கு, சாமானிய மக்களுக்கு இடையூறு செய்யும் ரவுடிகளை மிடுக்காக நடமாட விட்டு வேடிக்கை பார்ப்பது, காவல்துறையின் மிடுக்கை நாமே குறைக்கும் செயல் ஆகாதா? என்று ஒற்றை வரியில் பதிலளிக்கிறார் எஸ்.பி பிரவேஸ்குமார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை