Skip to main content

144 தடையை மீறியதாக எம்எல்ஏ கருணாஸ் மீது வழக்குப்பதிவு!

Oct 14, 2020 176 views Posted By : YarlSri TV
Image

144 தடையை மீறியதாக எம்எல்ஏ கருணாஸ் மீது வழக்குப்பதிவு! 

கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டத்தை கூட்டியதாக எம்.எல்.ஏ கருணாஸ் உள்ளிட்ட 75 பேர் மீது திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி தாரநல்லூர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகைப்படம் தாங்கிய



பெயர் பலகை, மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து

நேற்று தாராநல்லூர் பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் எம்எல்ஏ கருணாஸ்,

சேதப்படுத்தப்பட்ட முத்துராமலிங்க தேவர் பேனரை, நேரில் பார்வையிட்டு, பின் அங்குள்ள பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.



இந்நிலையில், திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் கருணாஸ் உள்ளிட்ட 75 பேர் மீது 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் சமூக இடைவெளி இன்றி கூட்டத்தை கூட்டியது, வைரஸ் தொற்று பரவ உடந்தையாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை