நடிகை குஷ்பு மிகவும் சிந்திக்கக் கூடிய நபர் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!
Oct 14, 2020 254 views Posted By : YarlSri TV
நடிகை குஷ்பு மிகவும் சிந்திக்கக் கூடிய நபர் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!
திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக நடிகை குஷ்பு காங்கிரசில் இணைந்து கொண்டார். அவருக்கு காங்கிரஸில் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டும், குஷ்பு கட்சியின் செயல்பாடுகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற குஷ்பு, பாஜகவில் இணைந்து கொண்டார்.
குஷ்பு கட்சியில் இருந்த போதும் நடிகையாகவே இருந்ததாகவும் கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்றாற்போல செயல்படவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குற்றஞ்சாட்டினார். ஆனால், தான் கட்சியில் இருந்த வரை தனது கடைமையை சரியாக செய்தேன் என்றும் உயர் பதவிகளில் இருப்பவர்கள் தன்னை அடக்கி ஒடுக்கியதால் கட்சியில் இருந்து வெளியேறினேன் என்றும் குஷ்பு தெரிவித்தார். பாஜகவில் இணைந்த குஷ்வை, தமிழக பாஜகவினர் புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் குஷ்பு பற்றி பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு அரசியலில் சாதாரண நபர் இல்லை என்றும் ஆழ்ந்து சிந்திக்க கூடிய திறமை மிக்கவர் என்றும் கூறியுள்ளார். பாஜகவினர் குஷ்புவை புகழ்ந்து வரும் நிலையில், அவருக்கு கட்சியில் எந்த பதவி வழங்கப்படும் என்பது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago