மார்க்கெட்டில் கடை ஒதுக்கக்கோரி கடை உரிமையாளர்கள் போராட்டம்!
Oct 10, 2020 245 views Posted By : YarlSri TV
மார்க்கெட்டில் கடை ஒதுக்கக்கோரி கடை உரிமையாளர்கள் போராட்டம்!
திருச்சி உறையூரில் 3 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மீன் மார்க்கெட் நேற்று திறந்துவைக்கப்பட்டது. புத்தூர் பகுதியில் உள்ள மீன்மார்கெட்டில் மொத்த மற்றும் சில்லறை மீன் கடைகள், இறைச்சி மற்றும் காய்கறி கடைகள் என 115 கடைகள் செயல்பட்டு வந்தன. துர்நாற்றம் மற்றும்
போக்குவரத்து நெரிசல் காரணமாக இங்கு செயல்பட்டு வந்த கடைகளுக்கு மாற்றாக உறையூர் – குழுமணி சாலையில் 3 கோடியே 15 லட்சம் சார்பில் புதிதாக கடைகள் கட்டப்பட்டு வந்தன. கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று இந்த மார்க்கெட் திறந்துவைக்கப்பட்டது. அப்போது புத்தூர் மார்க்கெட்டில் கடை வைத்திருந்த 40 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் கடை
ஒதுக்காததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மீன் மற்றும் இறைச்சி கடை உரிமையாளர்கள் தங்களுக்கு கடை ஒதுக்கக் வலியுறுத்து மண்ணெண்ணை பாட்டிலுடன் தீக்குளிக்க முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்ட கடை உரிமையாளர்கள், தங்களுக்கு கடை ஒதுக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழி இல்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago