Skip to main content

வடக்கு மாகாணத்தில் இதுவரை 12 கொரோனா நோயாளர் இனம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் பட்டும் ஒன்பது பேர் இனம் காணப்பட்டுள்ளனர்!

Oct 12, 2020 235 views Posted By : YarlSri TV
Image

வடக்கு மாகாணத்தில் இதுவரை 12 கொரோனா நோயாளர் இனம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் பட்டும் ஒன்பது பேர் இனம் காணப்பட்டுள்ளனர்! 

வடக்கு மாகாணத்தில் இதுவரை 12 கொரோனா நோயாளர் இனம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னாரில் பட்டும் ஒன்பது பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.



மன்னார் மாவட்டத்தில் ஓர்  கொரோனா நோயாளி இனம்காணப்பட்ட நிலையில் நேற்று  முன்தினம்  ஐவரும் நேற்றைய தினம் மூவருக்கும்  கொரோனா தொற்று உறுதி் செய்யப்பட்டுள்ளது.



மன்னார்  மாவட்டத்தில்  ஒருவரிற்கு  கொரனா இனம் காணப்பட்டதனையடுத்து   150 பேர் உடனடியாகவே தனிமைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கு  பி.சி.ஆர் பரிசோதனையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் வெள்ளிக் கிழமை  காலையில் 42 பேரிடமும்  மாலையில் 51 பேரிடமும் என மொத்தம் 93 பேரிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.



இந்த 93  மாதிரிகளில் முதன் முதலாக இனம்காணப்பட்ட கொரோனா நோநாளியுடன் முதலாவது தொடர்பாளர்களான  42 பேரின்  மாதிரிகளின் முடிவுகளில்  நேற்று முன்தினம் 27 பேரினது முடிவுகள் வெளிவந்த நிலையில் அதில் ஐவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன் எஞ்சிய 15 பேரின் முடிவுகள் நேற்றைய தினம் வெளிவந்தபோது அதில் மூவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதேபோன்று இரண்டாம்நிலை தொடர்பாளர்கள் என இனம்காணப்பட்ட எஞ்சிய  51 பேரின் முடிவுகள் இன்று வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் மன்னார் மாவட்டத்தின் இரு கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை