யாழ் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பேணி க பொ த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியது!
Oct 12, 2020 265 views Posted By : YarlSri TV
யாழ் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பேணி க பொ த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியது!
யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகிய க பொ த உயர்தரப் பரீட்சைக்கு10 940 மாணவர்கள் தோற்றுகின்றனர் என வடக்கு மாகாண கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன..
யாழ்ப்பாணம், தீவகம்,
தென்மராட்சி வலயத்தில் பாடசாலை பரீட்சாத்திகள் 4727 பேரும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் 841 பேருமாக 5569 பேர் க பொ த உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்
வலிகாமம், வடமராட்சி ,வலயத்தில் பாடசாலை பரீட்சாத்திகள் 4479 பேரும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் 892 பேருமாக
5371 பேர் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்
86 பரீட்சை நிலையங்கள் 18 பரீட்சை இணைப்பு நிலையங்களில் யாழ் மாவட்ட மாணவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியினை பேணி பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
இதேவேளை தனிமைப்படுத்தலுக் குட்படுத்தப்பட்டுள்ள புங்குடுதீவு பிரதேசத்தில் இரண்டு மாணவர்கள் க பொ த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் இரண்டு மாணவர் களும் வேலணை மத்திய கல்லூரி பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்த இரண்டு மாணவர்களும் தனித்தனி வகுப்பறைகளில் தமது பரீட்சையினைஎழுதுவதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது அவர்கள் இருவரும் வேலணை மத்திய கல்லூரி மாணவர் விடுதியில் தனியான இடத்தில் தங்க வைக்கப்பட்டு பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது
க.பொ.த உயர்தரப் பரீட்சையிலே வடக்கு மாகாணத்தில் 166 பரீட்சை நிலையங்களில் இருந்து 20 ஆயிரத்து 325 மாணவர்கள் தோற்றவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
இன்று ஆரம்பமாகியுள்ள க.பொ.த . உயர்தரப் பரீட்சையிலே க 20 ஆயிரத்து 325 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இவர்களில் 16 ஆயிரத்து 949 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 3 ஆயிரத்து 379 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உள் அடங்குகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago